வனப்பகுதிகளில் குட்டிகளோடு முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளோடு முகாமிட்டுள்ளன.
அதிக அளவில் குட்டிகள் இருப்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்குள் படையெடுத்து செல்லும் அபாயம் உள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், காட்டு யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.