கந்தசஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம் : தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு

கந்தசஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம் : தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு

Update: 2018-11-04 03:52 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் தங்குவதற்காக கோவில் வளாகத்தைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, வரும் 13-ஆம் தேதி நடக்கவுள்ள சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. கோவிலில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்