480 பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்திய 3 பேர் கைது..!

மதுரையில் ஓட்டுனரை கட்டி போட்டு 480 பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-20 00:31 GMT
நாமக்கல் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த நடராஜன் என்பவர் சேலத்தில் இருந்து 480 பருப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மதுரை வந்தார். அப்போது கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் நடராஜனை கட்டி போட்டு, பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்தி சென்றனர். சோழவந்தான் போலீசார், நடத்திய தேடுதல் வேட்டையில், லாரியை கடத்திய ஆதித்யா கார்த்திக், முத்துக்குமார், ஜெயசூர்யா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்