இறுதிச் சடங்கு செய்யக்கூட நீரில்லை - தண்ணீருக்காக வாடும் கிராமத்து மக்கள்

இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட நீரின்றி, கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2018-08-09 04:53 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியை சேர்ந்த விவேகானந்தா நகரில், கடந்த சில மாதங்களாக குடிநீரின்றி, பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என, பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில், இந்த பகுதியைச் சேர்ந்த இருவர் உடல் நலக் குறைவால் இறந்து போன நிலையில், இறுதிச் சடங்கு செய்யக் கூட தண்ணீர் கிடைக்காமல், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர். குடிநீர்க் குழாயில் தண்ணீர் வருமா என்ற எதிர்பார்ப்பில், கிராம மக்கள் காத்துக் கிடக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்