Ayyappan Temple | ஈரோடு ஐயப்பன் கோயிலில் திறக்கப்பட்ட 18ஆம் படி.. பெண்களும் ஏறி சுவாமி தரிசனம்..
ஈரோடு ஐயப்பன் கோயிலில் பெண்கள் பதினெட்டாம் படி ஏறி தரிசனம்
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், ஆண், பெண் இரு பாலரும் 18 படிகளை ஏறி சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை,18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஆண், பெண் இரு பாலரும் படி ஏற அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.