புதுச்சேரியில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் நாராயணசாமி...
குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றினார்.
குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றினார். 71வது குடியரசு தின விழா, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சட்டப்பேரவை வளாகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர். இதில் சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.