"செய்றதையும் செஞ்சிட்டு ரோட்டுல பண்ற அட்டூழியத்த பாருங்களேன்" - கிறுகிறுத்த போலீஸ்.. வைரல் வீடியோ

Update: 2024-05-04 10:02 GMT

கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். தியாகதுருகம் சாலையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த புத்தந்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் பேருந்தை முந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் 4 முனை சந்திப்பு நோக்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காவலர் பாலமுருகன் அவரை மறித்து சோதனை செய்ய முற்பட்ட நிலையில், குமார் காவலரை பணி செய்ய விடாமலும் ஆபாசமாக திட்டியும் சாலையில் படுத்துக் கொண்டும் பிரச்சினையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் குமார் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்