"அசாம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" - பிரதமர் நரேந்திர மோடி அசாம் மக்களுக்கு வாக்குறுதி

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக அசாம் மக்கள் அச்சப்பட தேவையில்லை என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2019-12-12 08:54 GMT
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக அசாம் மக்கள் அச்சப்பட தேவையில்லை என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். யாரும் உங்கள் உரிமை, தனித்தன்மை மற்றும் அழகான கலாச்சாரத்தை  பறிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் பிரதமர் தமது பதிவில் உறுதி அளித்துள்ளார். அசாம் கலாச்சாரம் தொடர்ந்து மேலும் வளர்ந்து, பிரகாசிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6-ல் உள்ளபடி அரசியல், மொழி, கலாச்சாரம் மற்றும் நில உரிமையை பாதுகாக்க தானும், மத்திய அரசும் உறுதிபூண்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி, தனது பதிவில் உறுதி பட தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்