ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை

டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

Update: 2019-08-21 22:41 GMT
டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற வாரண்ட் அடிப்படையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதாகவும், சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவி​க்கப்பட்டது. 

இதற்கிடையே, இன்று காலை டெல்லி ரோஸ் அவின்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுவார் எனவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ முறையிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோல, ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்