மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

Update: 2019-04-21 12:54 GMT
மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும்  ஆதரவு அதிகரித்து வருவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் உள்ளது எனவும் மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்