"வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணையில்லா கடன்" - பிரதமர் மோடி

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Update: 2019-04-20 05:43 GMT
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், வர்த்தகர்களும் வியாபாரிகளும் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று தெரிவித்தார்.வர்த்தகர்களுக்கு 1 கோடி ரூபாய் வரையிலான கடனை 59 நிமிடத்தில் கிடைக்க வழிவகை செய்துள்ளதாக தெரிவித்துள்ள மோடி, சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதுடன், தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும் என்று கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்