"எண்ணங்கள் முழுவதும் அங்குதான் உள்ளது" - பிரதமர் மோடி

லடாக் பேருந்து விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-28 03:49 GMT

லடாக் பேருந்து விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்த அவரது பதிவில், லடாக் பேருந்து விபத்தில் துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்து தவிப்பதாகவும், தன் எண்ணங்கள் முழுவதும் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்