தமிழக திட்டத்துக்கு எதிராக வழக்கு.. கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்

Update: 2024-05-07 11:42 GMT

தமிழக திட்டத்துக்கு எதிராக வழக்கு.. கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிரான கர்நாடகத்தின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த விசாரணையின்போது, வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய கேள்விகள் குறித்தும், இடைக்கால உத்தரவுகள் குறித்தும் முடிவு செய்ய உள்ளதாக கூறி விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இன்றைய விசாரணையின்போது, கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறுவதால் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடகத்துக்கு அளித்த அவகாசத்தை ஜூலை 12 வரை நீட்டித்து, விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்