ரிசல்ட் வந்ததும்... + 2 மாணவி விபரீத முடிவு | Puducherry

Update: 2024-05-07 16:16 GMT

புதுச்சேரியில், மதிப்பெண் குறைந்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்வு முடிவில், புதுச்சேரி ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த மேனகா என்ற மாணவி, குறைந்த மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்