இரவு 10 மணிக்கு பாட்டுபோடுமாறு மது பாரில் சிவசேனா பிரமுகர் மகன் ரகளை

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், பார் மேலாளரை தாக்கி ஹோட்டலை சூறையாடிய, சிவசேனா பிரமுகரின் மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-05 07:17 GMT
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், பார் மேலாளரை தாக்கி ஹோட்டலை சூறையாடிய, சிவசேனா பிரமுகரின் மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவு ஒன்பதரை மணிக்கு மேல், இசைஒலி நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த சிவசேன பிரமுகரின் மகன், அங்கித் ரத்தன் மற்றும் அபிஷேக் ஹிரா ஆகியோர், மீண்டும் இசைக் கருவியை இயக்கியும், சத்தமாக பாடியும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தாக்குதலில் காயமடைந்த பார் மேலாளருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஓட்டலை சூறையாடி தப்பியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்