புதுவையில் கொரோனா பாதிப்பு அபாயகரம் - நீதிமன்றம் கவலை
புதுவையில் கொரோனா அபாயகரமாக பரவுவதாக கவலை தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
புதுவையில் கொரோனா அபாயகரமாக பரவுவதாக கவலை தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக பத்திரிகைச் செய்தி வெளியாகின.இதன் அடிப்படையில் தாமாகவே முன்வந்து
விசாரிக்கும் வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், 20 டன் ஆக்சிஜன் தேவை உள்ள நிலையில், 3 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மூலம் 82 டன் கிடைப்பதால் பற்றாக்குறை இல்லை என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, சென்னையை விட சிறிய அளவிலான புதுச்சேரியில் நாளொன்றுக்கு ஆயிரத்து 200 பேர் என்ற அளவில் தொற்று பாதிப்புக்குள்ளாவது அபாயகரமானது என தெரிவித்தனர்.
புதுச்சேரியில் தடுப்பூசி, ரெம்டெசிவிர், வெண்டிலேட்டர், படுக்கை ஆகியவற்றின் இருப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில், கொரோனா பாதிப்பை இவை அதிகரிக்கும் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வுகளோ அல்லது ஆதாரங்களோ இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கும் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.