ஒட்டகப்பால் பானம் கேட்டு தகராறு செய்த விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

புதுச்சேரியில், ஒட்டகபால் கேட்டு பேக்கரியை சூறையாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-11-07 08:15 GMT
புதுச்சேரியில், ஒட்டகபால் கேட்டு பேக்கரியை சூறையாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியாங்குப்பம் பகுதியில் உள்ள நாராயணன் என்பவரது கடைக்கு 4ஆம் தேதி இரவு வந்த மூன்று இளைஞர்கள், ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டது. கடையில் இருந்தவர்களை தாக்கிய அவர்கள்,சூறையாடினர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், முருங்கப்பாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த நைனார்மண்டபத்தை சேர்ந்த உதயா, கோகுல், முருகவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்