வேகமாக மூச்சை இழுத்த பெண்..நுரையீரலுக்குள் சிக்கிய மூக்குத்தி - பெண்களே மிக மிக உஷார்

Update: 2024-04-28 07:46 GMT

மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வேகமாக மூச்சை உள்ளே இழுத்த போது தவறுதலாக நுரையீரலில் சிக்கிக் கொண்ட மூக்குத்தியின் திருகாணியை மருத்துவர்கள் வெற்றிகரமாக, அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். வர்ஷா என்ற 35 வயது பெண் கடந்த சில நாள்களாக மூச்சுப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனை சென்று பார்த்த போது பரிசோதனை மூலம் அவரது நுரையீரலில் மூக்குத்தியின் திருகாணி சிக்கி இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து திருகாணியை மருத்துவர்கள் அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்