குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியை
கேரளாவில் குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியையின் பணிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
கேரளாவில்,குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியையின் பணிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தில், முழுக்க ஸ்வேதா டீச்சர் பத்திதான் பேச்சாக உள்ளது. அகல விரியும் கண்களில், முக பாவனைகளுடன் அழகழகாய் குட்டி குட்டி கதைகளை சொல்லி மாணவர்களை அவர் கவர்ந்துள்ளார்.