செங்கடலில் US போர் கப்பல்கள் மீது தாக்குதல்.. இந்திய பெருங்கடலிலும் அதிர்ச்சி.. அதிகரிக்கும் பதற்றம்

Update: 2024-04-30 04:35 GMT

ஏமனின் ஹவுதி அமைப்பினர் 2 வணிக‌க் கப்பல்கள் மற்றும் 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்ட ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா, செங்கடலில் அமெரிக்க போர்க்கல்கள் மீது ட்ரோன்கள் மூலம் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். மேலும், செங்கடலில் சைக்லேடஸ் என்ற வணிக‌க் கப்பலையும், இந்திய பெருங்கடலில் எம்எஸ்சி ஓரியன் என்ற வணிக‌க் கப்பலையும் தாக்கியதாக கூறினார். காசாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் வரை, இதுபோன்ற நடவடிக்கை நீடிக்கும் என்றும் ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்