மதுரையில் பிரபல ரவுடிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - உளவுத்துறை எச்சரிக்கை..மக்கள் வேதனை

Update: 2024-04-30 04:50 GMT

மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த ரவுடி காளீஸ்வரன் என்கிற வெள்ளைக்காளி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 15 நாட்கள் பரோல் கிடைத்துள்ளது. திருச்சி மாவட்ட போலீஸ் எல்லையில் உள்ள அவரது சகோதரி சத்யஜோதி வீட்டுக்கு, 15 நாட்கள் தங்கிச் செல்ல அவர் விருப்பம் தெரிவித்தார். உளவுத்துறை எச்சரிக்கையால் அவர் தங்கியுள்ள வீட்டிற்கு, சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தங்களது இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்