திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார்.

Update: 2019-12-04 18:04 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமின் பெற்ற நிலையில், அமலாக்கத் துறையின் வழக்கு காரணமாக திகார் சிறையில் சிதம்பரம் தொடர்ந்து இருந்து வந்தார். இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கிலும், உச்ச நீதிமன்ற அமர்வு இன்று காலை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 2 லட்ச ரூபாய் பிணைய தொகை, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது, வழக்கு தொடர்பாக பேட்டி அளிக்கக் கூடாது, சாட்சிகளை கலைக்க கூடாது என்பது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று இரவு 8 மணி அளவில் திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார். 106 நாள் சிறை வாசத்துக்கு பிறகு விடுதலையான அவருக்கு, சிறை வாசலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்