"காலை 10.30 மணிக்கு ப.சிதம்பரம் மனு விசாரணை" : அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது - சி.பி.ஐ.க்கு ப.சிதம்பரம் வழக்கறிஞர் கடிதம்

ப.சிதம்பரம் மனு மீதான விசாரணை காலை பத்தரை மணிக்கு வரவுள்ளதால் அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என அவரது வழக்கறிஞர் அர்தீப் சிங் குரானா தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-21 02:44 GMT
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனு மீதான விசாரணை காலை பத்தரை மணிக்கு வரவுள்ளதால் அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என அவரது வழக்கறிஞர் அர்தீப் சிங் குரானா (Arshdeep Singh Khurana), தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிபிஐ க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை சிதம்பரம் அணுகியுள்ளதாக கூறியுள்ளார். இரண்டு மணிநேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிதம்பரம் இல்லத்தில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில்  சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும்  அவர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்