BREAKING || தன் கடைசி நாட்களில் மனதளவில் தவியாய் தவித்த ஜெயக்குமார்... விசாரணையில் பகீர்
கடைசி நாட்களில் கடனில் தவித்த ஜெயக்குமார்
தனது ஒட்டுமொத்த சொத்தையும் வங்கிகளில் அடமானம் வைத்து சுமார் 4 கோடிக்கும் மேல் ஜெயக்குமார் கடன் வாங்கியது விசாரணையில் அம்பலம்.
மாதா மாதம் வங்கிகளுக்கான வட்டியாக மட்டுமே சுமார் 5 லட்ச ரூபாய் கட்டி வந்துள்ளார் ஜெயக்குமார்.
கடந்த சில மாதங்களாக வட்டி கட்ட முடியாமல் ஜெயக்குமார் தவித்ததாகவும் காவல்துறை விசாரணையில் தகவல்.
கடனை வசூலிக்க அடமானம் வைக்கப்பட்ட ஜெயக்குமாரின் சொத்துக்களை ஏலம் விடும் நடைமுறைகளை வங்கிகள் பரிசீலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
கான்டிராக்ட் தொழிலில் பெருத்த நஷ்டத்தில் இருந்த ஜெயக்குமார் வங்கியில் வாங்கிய பணத்தை அரசியலில் செலவிட்டது உண்மையா என்பது குறித்த விசாரணையும் தீவிரம்