மகனை பார்க்க வைத்து அப்பாவை வெட்டி சாய்த்த கொடூர உறவினர் - நெல்லையில் அதிர்ச்சி

Update: 2024-05-08 09:22 GMT

மகனை பார்க்க வைத்து அப்பாவை வெட்டி சாய்த்த கொடூர உறவினர் - நெல்லையில் அதிர்ச்சி

குடும்ப தகராறில் மகன் கண்முன்னே தந்தை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நெல்லை கூத்தன்குழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மீனவ கிராமமான கூத்தன்குழியை சேர்ந்தவர் டேவிட். மீன்பிடித் தொழில் செய்து வந்த இவருக்கும், இவரது உறவினரான மைக்கேல் என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தன் மகனுடன் பைக்கில் சென்ற டேவிட்டை, மைக்கேல் வழிமறித்து அவரையும், அவரது மகனையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மகன் அனலிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கூத்தங்குழி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மைக்கேலை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்