கள்ளக் காதல் அம்பலமானதால் 16 வயது மகள் கொலை

திருவனந்தபுரம் அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 11ம் வகுப்பு மாணவியை தாயே கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம் பதைபதைக்க வைத்துள்ளது.

Update: 2019-07-02 13:22 GMT
திருவனந்தபுரம் அடுத்த நெடுமங்காடு தெற்கும்கரை பகுதியில், கணவன் இறந்த நிலையில், 34 வயதான மஞ்சுஷா, 16 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். நெடுமங்காடு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 11 ஆம் வகுப்பு படிக்கும் மகள், வாடகை வீட்டில் வசிக்கும் அம்மா மஞ்சுஷாவை அவ்வப்போது வந்து பார்த்து செல்வது வழக்கம். அண்மையில், தாய் வீட்டுக்கு சென்ற மாணவி, மீண்டும் பாட்டி வீட்டுக்கு திரும்பவில்லை.பேத்தி வராதது குறித்து கேள்வி எழுப்பிய பாட்டியிடம், காதலனுடன் மகள் ஓடிவிட்டதாக கூறிய தாய் மஞ்சுஷா, மகளை தேடி வெளியூர் செல்வதாக கூறி புறப்பட்டுவிட்டார். சந்தேகம் அடைந்த பாட்டி, பேத்தி மாயமானது குறித்து நெடுமங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். விசாரணையில், தாய் மஞ்சுஷாவுக்கு வேறொரு ஆணுடன் பழக்கம் இருந்ததும், அவனுடன் சேர்ந்து, கழுத்தை நெரித்து மகளை கொலை செய்த பகீர் தகவலும் தெரியவந்தது.செல்போன் எண்களை மாற்றிவிட்டு, கன்னியாகுமரி பகுதியில் வீடு எடுத்து ஆண் ஒருவருடன் தங்கிருந்த தாய் மஞ்சுஷாவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவனது பெயர் அனீஷ் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது. மகள் வீட்டுக்கு வந்தபோது, தாம், காதலன் அனீசுடன் தனிமையில் இருந்ததை பார்த்து விட்டதாகவும்,  இதுகுறித்து தம்மிடம் சண்டையிட்டதாகவும் மஞ்சுஷா கூறினார். தமது அந்தரங்க ரகசியம் வெளியில் தெரியாமல் இருக்க, காதலன் அனீசுடன் சேர்ந்து, மகளை கொலை செய்து கிணற்றில் வீசியதாக அவர் சிறிதும் தயக்கம் இன்றி தெரிவித்தது போலீசாரை அதிரச் செய்தது. இதைத் தொடர்ந்து, பெண்ணின் உடலை மீட்ட போலீசார், தாயையும், அனீஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்