ரவுடியை வைத்து, மனைவியே, கணவனை கொன்ற சம்பவம் : மேலும் ஒரு ரவுடி கைது - முக்கிய குற்றவாளிகளுக்கு வலை

புதுச்சேரி நெல்லித்தோப்பில், கணவனை ரௌடியுடன் சேர்ந்து, மனைவியே கொலை செய்த வழக்கில் மேலும் ஒரு ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-05-19 20:33 GMT
புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள சாக்கடையில் சடலமாக கிடந்த லாரி டிரைவர் கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவரது மனைவி ஸ்டெல்லா , அவரது அக்காவின் ஆண் நண்பர் தமிழ்மணி மற்றும் அவரது நண்பர்கள் விமல்ராஜ் , விக்கி ஆகியோர் சேர்ந்து கமலக்கண்ணனை கொலை செய்து வீசியது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டெல்லாவை கடந்த 9 ம் தேதி கைதுசெய்த போலீசார், தமிழ்மணியின் நண்பரான விமல்ராஜை இன்று கைது செய்தனர். கமலக்கண்ணன் உடலை எடுத்துச்சென்று வீசுவதற்கு இவர் உடந்தையாக இருந்ததாக கூறிய போலீசார், முக்கிய குற்றவாளியான தமிழ்மணி மற்றும் விக்கி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்