"ஜம்மு காஷ்மீரில் விரைவில் அமைதி திரும்பும்" - ராஜ்நாத் சிங் உறுதி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-22 20:43 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் படையினரிடையே நல்ல ஒருங்கிணைப்பு உள்ளதாக தெரிவித்தார். நாட்டு மக்களின் ஒற்றுமை, பாதுகாப்புக்காக, பாஜக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்