பள்ளி மாணவி தூக்கிட்டு த*கொலை - போலீஸ் தீவிர விசாரணை

Update: 2024-04-25 05:08 GMT

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி மர்மான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரிய ஏரியூரைச் சேர்ந்த செல்வராசா என்பவரின் மகள் திவ்யா, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்