விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு

Update: 2022-09-05 07:28 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, விநாயகர் சிலையை கரைக்க சென்ற 18 வயது சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆனைமலை கரடு பகுதியைச் சேர்ந்த முத்துவேல் என்பவர், அப்பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை கரைக்க காவிரி ஆற்றுக்கு சென்ற போது, தண்ணீரில் மூழ்கினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், முத்துவேலின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்