பழனியில் 24 அடி ‘வேல்’ சிலை அகற்றம் - பரபரப்பு காட்சிகள்

Update: 2023-02-02 09:16 GMT

பழனியில், தைப்பூசத்தை முன்னிட்டு நிறுவப்பட்டிருந்த சுமார் 24 அடி உயர வேல் சிலையை பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினர் அகற்றினர்.

பழனி, சண்முக நதி அருகே தைப்பூசத்தை முன்னிட்டு சுமார் 24 அடி உயரமுள்ள பித்தளையினாலான வேல் சிலை நிறுவப்பட்டிருந்தது.

வரும் 7-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர், வேல் சிலையை அகற்றி விடுவதாக வழிபாட்டுக் குழுவினர் கூறியதாக தெரிகிறது.

எனினும், சிலையை நேற்று இரவுக்குள் அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்திருந்தனர்.

ஆனால், சிலை அகற்றப்படாததால் இன்று பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து சிலையை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்