வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேன்ட்... நகை வியாபாரிகளை கதிகலங்க வைத்த மர்ம நபர்கள்

தஞ்சையில் 5 கிலோ நகை மாயமான சம்பவத்தில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-06-01 03:43 GMT

சென்னையை சேர்ந்த 52 வயது மணி என்ற நகை வியாபாரி, வழக்கம் போல், தஞ்சைக்கு வந்து நகைகளை விற்றுள்ளார். மொத்தம் 7 கிலோ கொண்டு வந்த நிலையில், 2 கிலோவை விற்றுவிட்டு மீதம் 5 கிலோவை பையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இரவு 8 மணி அளவில், பிரபல உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்துள்ளார். அப்போது, பையை கீழே வைத்ததாக கூறப்படுகிறது. நகைப் பை திருடிய மர்மநபர்கள் இருவர் ஆட்டோவில் ஏறி தப்பியதாக கூறப்படும் சம்பவத்தில், தகவலின் பேரில் வந்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். 9 பேர் அளவில் அனைவரும் ஒரே மாதிரியான ஆடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்