20 அடி உயரத்திற்கு காற்றில் தூக்கி வீசப்பட்ட கார்... - பரிதாபமாக பலியான 3 பெண்கள்..

Update: 2024-04-27 11:42 GMT

அமெரிக்காவில் கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர் சென்ற கார் தெற்கு கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி கவுண்டியில் பாலத்தில் விபத்திற்குள்ளானது. அதிவேகமாக சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்திற்குக் காற்றில் பறந்து மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்