"இந்தியா - இலங்கை ஹைவே ரோடு!" - மாஸ் பிளான்

Update: 2024-05-09 02:51 GMT

இந்தியா- இலங்கை இடையே தரைவழிப்பாதை அமைக்கப்பட உள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிறுத்தப்பட்ட கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தரைவழிப்பாதை அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்