சீனாவில் புயல்...கனமழை...வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

மத்திய சீனாவில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

Update: 2021-09-27 09:03 GMT
மத்திய சீனாவில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஹெனான் மாகாணத்தில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் பலத்த சேதமடைந்து, பல இடங்களில் மின்வெட்டு மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணமாக கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். புயல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்