"கொரோனா வைரஸ் உலகை விட்டு எப்போதுமே நீங்காது" - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் உலகை விட்டு எப்போதுமே நீங்காத நிலை ஏற்படக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-05-14 03:29 GMT
கொரோனா வைரஸ் உலகை விட்டு எப்போதுமே நீங்காத நிலை ஏற்படக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் அதிகாரி மைக் ரயான், எச்.ஐ.வி. போன்று கொரோனாவும் உலகில் மற்றொரு வைரசாக தங்கிவிடும் சூழல் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.  எச்ஐவியுடன் ஒப்பிடுவது அதன் இருப்பை உணர்த்துவதற்காகவே எனவும் அவர் விளக்கம் அளித்தார். கொரோனா எப்போது முழுமையாக ஒழிக்கப்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என கூறினார். பாதிப்பு குறைந்து விட்டதாகக் கருதி ஊரடங்கை முழுமையாக விலக்குவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்