ஈராக்கில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
கடந்த இரண்டு மாதங்களாக வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தி, ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தி, ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்ட களத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று போலீசார் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.