கோத்தபய ராஜபக்சேக்கு சஜித் பிரேமதாச வேண்டுகோள்

'பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது' என்று, புதிதாக இலங்கை அதிபராக பொறுப்பேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேக்கு, சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-11-17 14:31 GMT
 மக்களின் தீர்ப்பை மதிப்பதாக தெரிவித்துள்ளார். தமக்காக மக்களும் கட்சித் தோழர்களும் செய்த தியாகத்தையும் உணர்வுப் பூர்வமான உழைப்பையும், ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர இலங்கையில், அமைதியாக தேர்தல் நடந்து முடிந்திருப்பதற்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு எடுத்த நடவடிக்கைகளே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அதிபரும் அதையே முன்னெடுத்து சென்று, ஜனநாயக நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் எந்த குடிமகனும் அல்லது தனது ஆதரவாளரும் தம்மை ஆதரித்தார்கள் என்பதற்காக விசாரணைக்கோ, துன்புறுத்தலுக்கோ உட்படுத்தக் கூடாது என அவர் கேட்டு கொண்டுள்ளார். கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து தாம் உடனடியாக விலகுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்