இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் - எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்

Update: 2019-03-09 13:06 GMT
இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜபக்ச,  பொருத்தம் அற்றவர்களுடனான கூட்டணியால் ஏற்பட்ட விளைவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மிகத் தாமதமாக உணர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.மோசமான கொள்கையால் இலங்கை பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்,இப்போதைய அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று குற்றம் சாட்டியதுடன்,அதனால்தான் ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டார் என்று குறிப்பிட்டார்.ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டது தவறு என ஜனாதிபதி மைத்திபால தற்போது  உணர்ந்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்