சென்னையில் இரவில் கேட்ட குழந்தை சத்தம்.. ஓடோடி வந்த பெற்றோர்.. மடக்கி பிடித்து பொளந்துகட்டிய மக்கள்

Update: 2024-03-03 04:55 GMT

சென்னை வியாசர்பாடி பகுதியில், தங்கள் குழந்தையை ஒருவர் கடத்த முயன்றதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் பகுதியில் வசித்து வரும் வேலு-தீபா தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு தங்கள் குழந்தைகள், உறவினர் குழந்தைகளுடன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது, தங்கள் இளைய மகனை அடையாளம் தெரியாத நபர் கையை பிடித்து இழுத்து தூக்க முயன்றதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். அந்த நபரை பொதுமக்கள் பிடித்து தாக்கி, பின்னர் காவலர்களிடம் ஒப்படைத்ததாகவும் கூறினர். இதுதொடர்பாக எம்.கே.பி. நகர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்