அதிகாலையே களைகட்டிய திருவல்லிக்கேணி - விமரிசையாக நடந்த கருட சேவை - பார்த்தசாரதி கோயிலில் சித்திரை

Update: 2024-04-25 06:15 GMT

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை மாத 10 நாள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று காலை 5:30க்கு கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து மதியம்12 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7:30க்கு ஹம்ச வாகன புறப்பாடும் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்