திருமணம் செய்ய பெண் கேட்ட இளைஞரை பரலோகம் அனுப்பி வைத்த பெண்வீட்டார்

Update: 2024-04-25 11:50 GMT

பொன்னமராவதி அருகே உள்ள அஞ்சுபுளிபட்டியை சேர்ந்த அடைக்கப்பன் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த காத்தான் என்பவரின் மகளை பெண் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, அடைக்கப்பன் மது அருந்திவிட்டு காத்தான் குடும்பத்தாரிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த காத்தான் மற்றும் அவரது மகன் கதிரவன் ஆகிய இருவரும், அரையாண்டிபட்டி கண்மாய்கரையில் நடந்து சென்ற அடைக்கப்பனை, கத்தியால் சரமாரியாக குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், விசாரணையின் அடிப்படையில், காத்தான் மற்றும் அவரது மகன் கதிரவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்