கிடைத்த ரகசிய தகவல் - அதிமுக நிர்வாகிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-04-23 05:45 GMT

நீலகிரியில், கள்ளத்துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடி வந்த விவகாரத்தில், அதிமுக நிர்வாகி தலைமறைவான நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்ட பணியாளர்கள், வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வருவதாக, வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அதிமுக வர்த்தக அணி தலைவர் சஜிவன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கி, 11 தோட்டாக்கள் மற்றும் வனவிலங்கு மாமிசம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், தேயிலை தோட்ட பணியாளர்களான பைசல், சாபு ஜாக்கப் மற்றும் பரமசிவன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி சஜிவன் உள்ளிட்ட மேலும் 3 பேர் தலைமறைவான நிலையில், அவர்களை வனத்துறை தேடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்