பெற்ற மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை! - மனைவி செயலால் வெளிவந்த உண்மை

Update: 2024-04-25 10:38 GMT

கரூர் அருகே, சொத்துத் தகராறில், பேரனுடன் சேர்ந்து சொந்த மகனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் ஜெகதாபி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்கிற மனோகரன் - சுதா தம்பதிக்கு, 2 பிள்ளைகள் உள்ளன. மனோகரனின் வீட்டிற்கு எதிரே, அவரது தந்தை மாணிக்கம், புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இதனை மனோகரன் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மாணிக்கம், தனது மகள் வழி பேரனான மணிராஜை வரவழைத்து, மனோகரனை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து குச்சியால் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த மனோகரன் உயிரிழந்துள்ளார். பின்னர், மனோகரனின் மனைவியை மிரட்டிய மாணிக்கம், மனோகரன் சாலை விபத்தில் இறந்ததாகக் கூறி உறவினர்களிடம் நாடகமாடி, அவரது உடலை மயானத்தில் எரித்துள்ளார். இந்த நிலையில், கணவனை அடித்துக் கொலை செய்ததாக, மனோகரனின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில், மாணிக்கம் மற்றும் மணிராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்