நெல்லையை அதிர வைத்த ஜெயக்குமார் மரணம் - குற்றவாளிகளை பிடிக்கும் வரை... உறவினர்கள் போட்ட சபதம்

Update: 2024-05-05 02:45 GMT

ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில், மோப்ப நாய் உதவியுடன் தடயவியல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் டிஐஜி மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் ஜெயக்குமாரின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், 7 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்குப் பிறகே உண்மை வெளிவரும் என்றும் கூறினார். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயக்குமாரின் சகோத‌ர‌ர் மற்றும் ஆதரவாளர்கள், குற்றவாளியை கைது செய்யும் முன்பு உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்