நாடு முழுவதும் நீட் தேர்வு.. தமிழகத்திலிருந்து 1.50 லட்சம் பேர்.. ரெடியாகும் மாணவர்கள்..

Update: 2024-05-05 02:39 GMT

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது..

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில்1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் நடக்கும் இந்த தேர்வானது, பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. தேர்வெழுத வரும் மாணவர்கள் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்