கோர்ட்டுக்கு வந்த சவுக்கு சங்கர் - பார்த்தவுடன் நீதிபதிகள் போட்ட உத்தரவு

Update: 2024-05-05 03:01 GMT

கோர்ட்டுக்கு வந்த சவுக்கு சங்கர் - பார்த்தவுடன் நீதிபதிகள் போட்ட உத்தரவு

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை வரும்17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் "யூ டியூப்" சேனல் ஒன்றில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து, கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்திருந்தார். அதன்பேரில், சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் அவரை கைது செய்த போலீசார், கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள், சவுக்கு சங்கரை வரும்17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்....

Tags:    

மேலும் செய்திகள்