சுட்டெரித்த வெயில்.. சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை | Erode

Update: 2024-04-20 16:00 GMT

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள எரஹனஹள்ளி, பனகள்ளி உள்ளிட்ட கிராமங்களில், இன்று திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்ததாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்