மின்சாரம் தாக்கி உயிரிழந்த பணியாளர் - அலட்சியமாகப் பேசிய அதிகாரி - கொதித்தெழுந்த உறவினர்கள்

Update: 2024-02-26 03:04 GMT

சேலம் மாவட்டம் கோவிந்தன் காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவர், தேவூர் துணை மின்சார வாரியத்தில் பணியாற்றும் குப்புசாமி என்பவருக்கு கீழ், தற்காலிக உதவியாளராக பணியாற்றியுள்ளார். இந்தநிலையில், கணியாளன்பட்டி பகுதியில் ஒரு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தங்கராசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் அப்பகுதி மின்கம்பத்தில் பழுதுபார்த்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்தபோது, உதவி பொறியாளர் கதிரேசன் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்கராசுவின் உறவினர்கள், அண்ணமார் கோவில் பகுதி பிரதான சாலையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். பின்னர் தீயணைப்புத்துறையினரின் உதவியோடு, தங்கராசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்