சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு... சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கஞ்சா கருப்பு

Update: 2024-04-27 15:13 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், நடிகர் கஞ்சா கருப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கொரட்டியில் உள்ள அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 300 காளைகள் பங்கேற்றன. விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், மாடுபிடி வீரர்கள் 50 பேர் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 11 நபர் காயமடைந்த நிலையில், மூன்று பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்